இயக்குநர் அட்லீ நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க முன் வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக வட இந்தியாவில் சுற்றி வரும் அட்லீயை அங்குள்ள போட்டொகிராஃபர்கள் இட்லி என அழைத்துள்ள வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படத்திற்காக பல விருதுகளை வென்று குவித்தார். அதையடுத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து தளபதி விஜயுடன் பயணித்தார். மேலும், பாலிவுட்டில் ஷாருக்கானின் ஜவான் படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஜவான் படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அட்லீ தமிழில் தளபதி விஜய்யை வைத்து இயக்கிய தெறி படத்தை பாலிவுட்டில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோரை வைத்து ரீமேக்காக பேபி ஜான் படத்தை தயாரித்தார். பேபி ஜான் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அட்லீயின் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்று வருவதால் பலரும் அவர் பல படங்களில் இருந்து கதைகளை திருடுகிறார் என அவர் மேல் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திற்கு பிறகு அவர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட் ஸ்டைலில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது அல்லு அர்ஜுனின் 22வது படம். புஷ்பாவை அடுத்து திரையரங்குகளை தெறிக்கவிட தயாராகி வருகிறார் அல்லு அர்ஜுன்.
அந்த படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளுக்காக மீண்டும் மும்பையில் சுற்றிவரும் அட்லீயை பார்த்த அங்குள்ள போட்டோகிராஃபர்கள் இட்லி.. இட்லி என அழைத்திருக்கும் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அட்லீ அதை கேட்டும் கேட்காதது போல் ரியாக்ட் செய்துள்ளார். ஜவான் பட இயக்குநருக்கா இந்த நிலைமை என ரசிகர்கள் கேல்வி எழுப்பி வருகின்றனர்.