வடிவேலும், விவேக்கும் சமகாலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக கோலோச்சியவர்கள். வடிவேலுவுக்கு விவேக் சீனியர். கவுண்டமணியின் மார்க்கெட் இறங்க துவங்கியபின் அவர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். விவேக்கும், வடிவேலும் நிறைய படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கிறார்கள்.
இருவரும் தனித்தனியாக மட்டுமே ஒன்றாக சேர்ந்தும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அதில், மனதை திருடி விட்டாய், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, ஒருவன், லூட்டி, நந்தவனத்தேரு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உள்ளிட்ட பல படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
விவேக்கும், வடிவேலுவும் குணத்தில் வேறுபட்டவர்கள். வாய்ப்பில்லாமல் இருக்கும் காமெடி நடிகர்களை அழைத்து தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பார் விவேக். ஆனால், வடிவேலு அப்படி இல்லை. அவர் சொல்வதை கேட்டும் நடிகர்களை மட்டுமே தன்னுடன் நடிக்க வைப்பார். அதோடு, அவர்களுக்கு குறைவான சம்பளத்தையே கொடுக்க சொல்வார். அவர்கள் தன்னை மட்டுமே நம்பி இருக்க வேண்டும் என நினைப்பார். அவர்களை அடிமைகள் போல நடத்துவார்.

ராஜ்கிரண் இல்லையென்றால் வடிவேல் சினிமாவிலேயே இல்லை. அவர்தான் 4 வருடங்கள் வடிவேலுவை தனது அலுவகத்தில் வைத்து சோறு போட்டார். என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்க வைத்து வாய்ப்பு கொடுத்தார். அதன்பின் ஆர்.வி.உதயகுமார் தொடார்ந்து அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார்.
பல வருடங்கள் கழித்து இப்போதுதான் இதை முதன் முறையாக சொல்லியிருக்கிறார். வடிவேலுதான் என் கடவுள் என பேச துவங்கியிருக்கிறார். இதுவரை எந்த மேடையிலும் வடிவேலு இதை சொன்னதே இல்லை. அதேபோல், விஜயகாந்த் செய்த உதவிகளையும் அவர் எங்கேயும் சொன்னதில்லை. அதோடு, எனக்கு யாரும் வேஷ்டி, சட்டை வாங்கிகொடுக்கவில்லை என சொல்லி வருகிறார்.
அதேபோல், விவேக் இறந்தபோது வடிவேலு நேரில் சென்று பார்க்கவே இல்லை. விவேக் மட்டுமில்லை. அவருடன் பல படங்களில் நடித்த அல்வா வாசு, போண்டா மணி போன்றவர்கள் இறந்தபோதும் வடிவேலு நேரில் செல்லவில்லை. இது அப்போது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வடிவேலு ‘விவேக்கோட இழப்பு தாங்க முடியாத வலி. அவன் இறப்புக்கு நான் போகலன்னு நிறைய பேர் சொன்னாங்க.. ஆனா வீட்டுக்கெல்லாம் போய் அவரின் மனைவி, புள்ள குட்டிகிட்ட எல்லாம் விசாரித்தேன். அவன் இறப்பான்னு எதிர்பார்க்கல. அந்த நேரத்துல நானே ரொம்ப மோசமா இருந்தேன். எங்க வீட்லயே ஒருத்தர் ஒருத்தர பாத்து பயந்துட்டுதான் இருந்தோம். அதனாலதான் அப்ப போகல’ என சொல்லியிருக்கிறார்.