என்னை வாழ வச்சது அவர்தான்!. அவர் இல்லன்னா!.. இப்பவாவது சொல்ல மனசு வந்துச்சே வடிவேலுவுக்கு!..

கோலிவுட்டின் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் வடிவேலு. ஏன் இருந்தவர் என சொல்கிறோம் எனில் இப்போது அவர் முன்னணி காமெடி நடிகராக இல்லை. கடந்த 5 வருடங்களாகவே அவரை திரைப்படங்களில் அதிகம் பார்க்க முடிவதில்லை. அவர் ஃபீல்ட் அவுட் ஆனதற்கு காரணமே இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடந்த பிரச்சனைதான்.

வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது ராஜ்கிரண்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். மதுரையில் ஒரு விழாவுக்கு சென்றிருந்த ராஜ்கிரணுக்கு டைம் பாஸ் செய்ய அனுப்பப்பட்டவர்தான் வடிவேலு. பாட்டுப்பாடி, காமெடி செய்து காமெடி செய்து சிரிக்க வைத்த வடிவேலுவை சென்னை வர சொல்லி தனது அலுவலகத்தில் வைத்துகொண்டார் ராஜ்கிரண்.

அங்கே எடுபுடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வடிவேலுவுக்கு இருந்துகொண்டே வந்தது. என் ராசாவின் மனசிலே படம் எடுத்தபோது அதில் ஒரு சின்ன வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைத்தார் ராஜ்கிரண். அதிலிருந்துதான் வடிவேலுவின் சினிமா பயணம் தொடங்கியது.

rajkiran
rajkiran

அதன்பின் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் ஒரு நல்ல வேடம் கொடுத்தார். அதைப்பார்த்துவிட்டு இயக்குனர் ஆர்.வி.உதயகுகுமார் வடிவேலுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார். அப்படித்தான் சின்னக்கவுண்டர், சிங்கார வேலன், ராஜகுமாரன், நந்தவனத்தேரு உள்ளிட்ட ஆர்.வி.உதயகுமாரின் படங்களில் வடிவேலு நடித்தார்.

அதன்பின் பல வருடங்கள் சினிமாவில் நடித்து உச்சம் தொட்ட வடிவேலு எங்கேயும் தன்னை தூக்கிவிட்டவர்கள் பற்றி பேசியதே இல்லை. சின்னக் கவுண்டர் படத்தில் நடிக்கும்போது விஜயகாந்த் வேஷ்டி சட்டை வாங்கி கொடுத்ததாக சொல்கிறார்கள். ஆனால், அதே விஜயகாந்தை சொந்த பிரச்சனைக்காக அரசியல் பிரச்சாரத்தில் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசினார் வடிவேலு.

இந்நிலையில்தான் முதன்முறையாக பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் பற்றி பேசியிருக்கிறார். சினிமாவுக்கு வந்து 4 வருஷம் ராஜ்கிரண் ஆபிஸ்லதான் இருந்தேன். அவர்தான் என்னை வாழ வச்சார். சினிமாவுல என்னை தூக்கி கொண்டு வந்தவர் அவர்தான். அவர்தான் என் கடவுள். அதுக்கு அப்புறம் கமல் சாரோட தேவர் மகன்தான் டர்னிங் பாயிண்ட். அந்த படம் வரைக்கும் நான் ராஜ்கிரண் ஐயா அலுவலகத்தில்தான் இருந்தேன். அவரோட 7 படத்துல சம்பளம் வாங்கமாலே நடிச்சேன்’ என சொல்லியிருக்கிறார்.

நன்றி

Leave a Comment