Vadivel: சினிமாவில் ஒருவர் மேலே வரவேண்டுமெனில் மற்றொருவரின் உதவி வேண்டும். இவனை வளர்த்துவிடுவோம், வாய்ப்பு கொடுப்போம் என ஒருவர் நினைக்க வேண்டும். அந்த உதவியை செய்ய நினைப்பவர் ஒரு தயாரிப்பாளராகவோ, இயக்குனராகவோ இல்லை நடிகராகவே இருக்கலாம். வடிவேலு கூட அப்படி பலராலும் உருவானவர்தான் .
மதுரையிலிருந்து நடிக்கும் ஆசையில் சென்னை வந்து ராஜ்கிரண் அலுவலகத்தில் டீ, காபி வாங்கி கொடுக்கும் ஆபிஸ் பாயாக வேலை பார்த்து வந்தார். அப்போது என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து அதில் நடித்து வந்தார் ராஜ்கிரண். ஒருநாள் கவுண்டமணி வர தாமதமான போது வடிவேலுவை வைத்து சில காட்சிகளை எடுத்தார் ராஜ்கிரண். அப்போது அங்கு வந்த கவுண்டமணிக்கே அது பிடிக்கவில்லை. ஆனாலும், ராஜ்கிரண் அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார்.
ஆர்.வி.உதயகுமார் சின்னக்கவுண்டர் படமெடுத்தபோது வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், கவுண்டமணிக்கு அதில் விருப்பமில்லை. எனவே, விஜயகாந்திடம் போய் ‘கவுண்டமணி அண்னன் எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறார்’ என வடிவேலு ஒப்பாரி வைக்க உதயகுமாரை அழைத்து ‘படம் முழுக்க எனக்கு கொடை பிடிக்கும் வேஷம் இவருக்கு கொடுங்க’ என விஜயகாந்த் சொல்ல வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

2 நாட்களுக்கும் மேல் வடிவேலு குளிக்காமலே இருந்தார். சிங்கமுத்துதான் 10 ரூபாய் கொடுத்து ‘சோப்பு வாங்கி குளிச்சிட்டு வா’ என அனுப்பி வைத்தார். குளித்த வடிவேலுக்கு மாற்றிக்கொள்ளவே உடை இல்லை. இதைப்பார்த்த விஜயகாந்த் தனது உதவியாளரை அழைத்து ‘இவருக்கு நான்கைந்து வேஷ்டி சட்டை வாங்கிகொடு’ என சொன்னார். இப்படி சினிமாவில் வளர்ந்தவர்தான் வடிவேலு.
ஆனால், தன்னை தூக்கிவிட்டவர்கள் பற்றி எங்கேயும் சொல்லமாட்டார் வடிவேலு. ஏனெனில் வடிவேலுக்கு நன்றியுணர்வு என்பது ஒரு சதவீதம் கூட கிடையாது. வாய்ப்பு வாங்கி கொடுத்த விஜயகாந்தையே மிகவும் அசிங்கமாக திட்டியவர்தான் வடிவேலு. அதோடு கேங்கர்ஸ் பட புரமோஷனுக்காக ஊடகங்களில் பேசிவரும் வடிவேலு தொடர்ந்து பொய்களை மட்டுமே சொல்லி வருகிறார்.
எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இல்லை. ராஜ்கிரண் சொன்னதால் நடித்தேன். சின்னக்கவுண்டர் படத்தில் எனக்கு யாரே வேஷ்டியெல்லாம் வாங்கி கொடுத்தார்கள் என பேசுகிறார்கள். அந்த படத்தில் எனக்கு ஒன்றுமில்லை. ஒருவேஷ்டி மட்டுமே கட்டியிருப்பேன்’ என பேசியிருக்கிறார். இதையடுத்து ‘வடிவேலுக்கு நன்றியே இல்லை’ என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.