கமலுக்கே அந்த நிலைமைனா? நயன்தாராவுக்கு? அடக்கி வாசிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

Nayanthara: சுந்தர் சி வடிவேலு காம்போவை எதிர்பார்த்து அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்ப இன்று கேங்கர்ஸ் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. படம் இதுவரை நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்திற்கான ஓபனிங் நன்றாகவே இருக்கிறது .ஏற்கனவே பல பேட்டிகளில் பேசும் பொழுது வடிவேலு தொடர்பான காமெடியை பற்றி அவர்கள் ஏராளமான விஷயங்களை சொன்னார்கள். அது ஆடியோவாக கேட்கும் பொழுதே அவ்வளவு சிரிப்பு வந்தது. அதை விசுவலாக பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.

அவ்வளவு பிரமாதமாக வடிவேலுவை ரொம்ப காலத்துக்கு பிறகு சுந்தர் சி கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் இந்த படம் வடிவேலுவுக்கு கொஞ்சம் பிக்கப் ஆகிவிட்டால் இனிமேல் வடிவேலுவை கையில் பிடிக்கவே முடியாது. வடிவேலுவுக்கு உண்மையான ரீ எண்டிரி என்பது இந்த படம் தான். ஏனெனில் ட்ரெய்லரில் பார்க்கும் பொழுதே லேடி கெட்டப்பில் வருவது அவருடைய நகைச்சுவை என முன்பு பார்த்த வடிவேலுவை பார்த்தது போல் இருக்கிறது. இன்னொரு பக்கம் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அந்த படம் ஆரம்பிக்கும் பொழுதிலிருந்து நயன்தாராவுக்கும் சுந்தர் சிக்கும் இடையே சில பல பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இப்போது நயன்தாரா கொஞ்சம் அடக்கி வாசிப்பதாக சொல்கிறார்கள். ஏனெனில் நயன்தாராவுக்கு தொடர்ந்து படங்கள் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த டெஸ்ட் திரைப்படம் படுபயங்கரமாக அடி வாங்கியது.

கமலுக்கே அந்த நிலைமைனா? நயன்தாராவுக்கு? அடக்கி வாசிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்

அதனால் இனிமேல் நயன்தாரா வேறு எங்கேயும் அலட்டிக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒரு படம் ஓடவே இல்லை. அதற்கு ஏன் இந்த அலட்டல் என யாராவது ஒருத்தர் சொன்னால் கூட அது நயன்தாராவுக்கு பெரிய சங்கடம் ஆகிவிடும். ஏனெனில் ஒரு டைரக்டர் கேட்க மாட்டார், படத்தில் இருக்கும் முக்கியமான டெக்னீசியன்கள் கேட்க மாட்டார்கள் ,இந்த கேள்வியை அவங்களே கேட்டுக் கொண்டு அந்த பக்கம் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒரு சாதாரண தொழிலாளி கேட்டு விடுவான். அந்த மாதிரி நடந்திருக்கிறது .ஒரு முறை கமல்ஹாசன், ஒரு ஈரமான சூழல். மழைக்காலம். ஊட்டி போன்ற ஒரு இடம்.

அங்கு விறகு அடுப்பு எரிக்கிற மாதிரி காட்சி வருது. விறகு எல்லாம் போட்டாச்சு. கமல் வந்து வந்து கேட்டுக் கொண்டே இருக்கிறாராம் ,பத்துச்சா பத்துச்சா என கேட்டுக் கொண்டே இருக்கிறாராம் .ஒரு கட்டத்தில் டென்ஷனான அசிஸ்டன்ட் டைரக்டர் கமல் நிற்கும் பொழுதே அந்த விறகிடம் போய் கமலஹாசன் கமலஹாசன் கமலஹாசன் என மூன்று முறை சொல்லி இருக்கிறார். சார் உங்க பெயரை சொன்னால் கூட விறகு பத்தலயே அப்படின்னு சொல்லிட்டாராம். உதவியாளர்கள்,வேலை செய்பவர்கள் என இப்படித்தான் இருப்பார்கள்.

சட்டென கோபம் வந்தால் மூஞ்சிக்கு எதிராக இப்படித்தான் பேசி விடுவார்கள். அப்படி ஒரு வார்த்தையை நாம் கேட்டு விடக் கூடாது என்பதற்காகவே நயன்தாரா கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக இருப்பார். ஒரு படம் ஓடுச்சு அப்படின்னா ஓகே. ஒன்றும் இல்லை ரொம்ப நாளைக்கு பிறகு சிம்ரன் குட் பேட் அக்லியில் நடித்திருந்தார். அவர் வரும் அந்த ஒரு காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்க முடிந்தது .நயன்தாராவை விட அவருக்கு அந்த அளவு ஒரு வரவேற்பு கிடைத்தது. இந்த மாதிரி எப்பொழுதாவது நயன்தாராவுக்கு கிடைத்ததா? இதில் யார் உயர்ந்தவராக தெரிகிறார் ?சிம்ரன் தானே .அப்படி கூட இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அலட்டிக் கொள்வது என்பது நயன்தாராவுக்கே ஒரு கட்டத்தில் நாம் ஏதோ தவறு செய்கிறோம் என்பதை உணர்த்தி இருக்கும் என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறினார்

நன்றி

Leave a Comment