காத்திருந்து.. காத்திருந்து!.. வெங்கட்பிரபு வரிசையில் அடுத்த இயக்குனர்!..

Sivakarthkeyan: சினிமாவில் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ஒரு ஃபார்முலாவை பின்பற்றுவார்கள். யார் ஹிட் கொடுக்கிறார்களோ அவர்களை மட்டுமே தங்களுக்காக பயன்படுத்துவார்கள். தோல்விப்படம் கொடுத்த இயக்குனர்களை தயாரிப்பாளர்களும், நடிகர்களும் சீண்ட மாட்டார்கள். ஒரு இயக்குனர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போது ஒரு நடிகருக்கு கதை சொன்னால் அப்போது எடுத்துகொண்டிருக்கும் படம் ரிலீஸ் ஆகும் வரை சம்மதம் சொல்லமாட்டார்கள்.

அந்த படம் வெற்றி என்றால் உடனே இயக்குனரை அழைத்து ‘நீங்க சொன்ன கதையில் நான் நடிக்கிறேன்’ என்பார்கள். அதுவே படம் தோல்வி என்றால் இயக்குனரின் போனை கூட எடுக்க மாட்டார்கள். இது சினிமாவில் காலம் காலமாக நடப்பதுதான். இவர்களுக்கு
மத்தியில்தான் இயக்குனர்கள் தாங்கள் எடுக்க நினைக்கும் படங்களை எடுக்க வேண்டும்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் மற்றவர்களின் உதவியில் மேலே வந்த நடிகர்களும் வளர்ந்த பின்னர் அதையேதான் செய்வார்கள். இதில், சிவகார்த்திகேயனும் விதிவிலக்கல்ல. விஜய் டிவியில் இருந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தவரை மேலே கொண்டு போனவர் தனுஷ்தான். அவரின் சொந்த காசை போட்டு எதிர் நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை தயாரித்தார்.

ஆனால், கொஞ்சம் வளர்ந்தபின் தனுஷையே அவர் கண்டுகொள்ளவில்லை. தற்போது அமரன் ஹிட்டுக்கு பின் அவரின் பார்வையே மாறிவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். கோட் படம் உருவானபோது சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னார் வெங்கட் பிரபு. சிவகார்த்திகேயனும் அதில் நடிக்க சம்மதித்தார்.

கோட் படம் முடிந்ததும் வெங்கட்பிரபு அந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே, வெங்கட்பிரபுவை கழட்டிவிட்டார் எஸ்.கே. இப்போது கார்த்திக் சுப்பாராஜும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார். ரெட்ரோ படம் ஷூட்டிங் நடக்கும்போதே சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை சொன்னார். கதை பிடித்திருந்தாலும் ரெட்ரோ படம் ஓடினால் பார்ப்போம் என்கிற மனநிலையில் இருக்கிறாராம் எஸ்.கே.

karthik subburaj2
karthik subburaj2

எஸ்.கே. இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என்கிறார்கள். இந்த படம் முடிந்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்த்தில் நடித்த மதராஸி படத்தில் சில நாட்கள் அவர் நடிக்க வேண்டியிருக்கிறது. அதன்பின் டான் பட இயக்குனர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடிப்பாரா இல்லையா என்பது ரெட்ரோ படத்தின் ரிசல்ட்டுக்கு பின்னரே தெரியவரும்.

நன்றி

Leave a Comment