சுந்தர்.சி., வடிவேலு காம்போவில் இன்று கேங்கர்ஸ் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இநதப் படத்தைப் பற்றியும், வடிவேலுவுக்கான பெரிய கேப் குறித்தும் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பாருங்க.
கேங்கர்ஸ் படம் வடிவேலுவுக்கு கம்பேக்கா இருக்கும்னு நான் நம்புறேன். ஏன்னா இதுக்கு முன்னாடி வடிவேலு பேசினதுக்கும் இப்போ பேசினதுக்கும் வித்தியாசம் இருக்கு. இந்தப் படத்துல அவரோட தலையீடு இருக்காது.
இதுக்கு முன்னாடி அப்படி இருந்தது. வடிவேலு அவரது குரூப்பையே கழட்டி விட்டு ரொம்ப நாளாச்சு. அது தவறு. சிங்கமுத்துன்னு பெரிய குரூப்பையே வச்சிருந்தாரு. அதுல சிங்கமுத்துவைத் திரும்ப சேர்க்கவே முடியாது. விரிசல் ரெண்டு பேருக்கும் அவ்வளவு விழுந்துட்டு. மற்றவர்களை மன்னிச்சிக்கூட சேர்த்துக்கலாம். இன்னொன்னு வடிவேலு தான் எங்களோட வாழ்வாதாரம்னு நினைச்சி இருந்தாங்க.
அவரு போன பிறகு அவங்களுக்கு எல்லாம் பெரும்பாலும் படவாய்ப்புகள் எல்லாம் இல்லை. கஷ்டப்பட்டவங்க எல்லாம் இருந்தாங்க. நாம நிறைய கோடி கோடியா சேர்த்து வச்சிட்டோம். 6 வருஷம்கூட ரெஸ்ட் எடுக்கலாம். ஆனா நம்மோட சேர்ந்தவங்க இப்படி கஷ்டப்படுறாங்களே. நம்ம மீண்டும் ரீ என்ட்ரி வரும்போது அவங்களைக் கூட சேர்த்துக்கணும்கற எண்ணம் அவருக்கிட்ட இல்லை.
அதை நாம கட்டாயப்படுத்த முடியாது. அது அவரு சம்பந்தப்பட்ட விஷயம். அவரது உரிமை. வடிவேலு காமெடி எவர்கிரீன். சந்தானம் வந்தபிறகு அதுல சின்ன மாற்றத்தைக் கொண்டு வந்தாரு. அவர் சென்னையில் புழங்குகிற வார்த்தைகளைப் போடுவாரு. அந்த வகையில் ரெண்டுபேருமே லெஜண்ட்கள்தான்.
ராஜ்கிரண் அவரை அறிமுகப்படுத்தினாலும் அவர் அவரை தனித்திறமையால் உருவாக்கிக் கொண்டு மிகப்பெரிய ஆளாக வளர்ந்தார். என்னைத் தவிர வேறு எவனும் கிடையாதுடா. நகைச்சுவை சக்கரவர்த்தி நான்தான்னு அவர் நினைக்கும்போது அவருக்கு வீழ்ச்சி ஆனது. இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சாரு.
காலைல 9 மணிக்கு சூட்டிங்னா 11.30மணிக்குத் தான் ஆரம்பிப்பாரு. ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம். அவரு அந்தப் பத்து நாள் காமெடியை 20 நாளா இழுப்பாரு. அந்த நேரத்துல யாராவது வர மாட்டாங்களான்னு நினைக்கும்போது சந்தானம் வந்தாரு. இவரு போய் அரசியல்ல பேசுனாரு. அப்போ தயாரிப்பாளர்களும் அவரை விட்டு ஒதுங்கிட்டாங்க. சிம்புதேவன் டைரக்ஷன்ல இம்சை அரசன் 23ம் புலிகேசி 2ம் பாகத்துல நடிக்கறதா இருந்தாரு. அதுல ரொம்ப பிரச்சனை ஆனது.

அந்தப் படத்துக்காக 4 கோடி ரூபாய்க்கு செட்டே போட்டாங்க. அது ஷங்கர் படம். அப்புறம் அந்த செட்டே மழையிலும், வெயிலிலும் நாசமாப் போனது. தயாரிப்பாளர் கவுன்சிலில் ஷங்கர் முறையிட வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டாங்க. அப்புறம் உதயநிதி, ஷங்கர், சுபாஷ்கரன்னு பலரும் பேசி அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வச்சாங்க. சிம்புதேவனை அவனுக்கு ஒண்ணுமே தெரியாது. வீட்டு வாசல்ல வந்து நிப்பான்.
நான்தான் அவனுக்கு சொல்லிக் கொடுத்தேன்னு எல்லாம் வடிவேலு அந்த சமயத்தில் பேட்டி கொடுத்தாராம். வடிவேலுவின் மீது இதெல்லாம் சேர்ந்து வேறு பார்வையைக் கொடுத்தது. நகைச்சுவை நடிகனைக் காமெடியனாகத் தான் பார்ப்பாங்க. ஆனா வில்லனா பார்க்கக்கூடாது. இப்ப எல்லாமே சரிபண்ணிட்டு வந்தாரு. கூட இருந்த எல்லாருமே அவருக்கு எதிராகத்தான் பேசிருக்காங்க.
ரீ என்ட்ரி கொடுக்கும்போதும் புது கேங்கோடு வந்துவிட்டார் வடிவேலு. அதே சமயம் அவருடன் இருந்த பழைய ஆள்கள் ரீ என்ட்ரிக்குப் பிறகு நம்மைத் தான் கூப்பிடுவாங்க என காத்து இருந்தார்களாம். அந்த நம்பிக்கைப் பொய்த்தது. அதனால தான் அவரு கூட இருந்தவங்க எல்லாம் அந்த நம்பிக்கைப் பொய்த்துப் போனதால அவருக்கு எதிரா பேட்டி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.