நடிகர் விஜயகாந்தை தமிழத்திரை உலகில் கேப்டன்னு எல்லாரும் சொல்வாங்க. அவருக்கு ஆளுமைத்திறன் அதிகம் உண்டு. சினிமாவிலும் சரி. அரசியலிலும் சரி. அவ்ளோ கெத்து அவரிடம் இருந்தது. அவரது மறைவு தமிழ்த்திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் செய்த பல உதவிகளும் இப்போதுதான் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. அந்த சமயத்தில் இவ்வளவு மீடியாக்கள் கிடையாது.
சோஷியல் மீடியா கிடையாது. இப்போ நிறைய உள்ளதால் அவரிடம் உதவி பெற்றவர்கள் பலரும் மீடியாக்களில் பேட்டி கொடுக்குறாங்க. அது வெளியே தெரியுது. அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகர் சரத்குமாரைப் பேட்டி எடுத்தார். அப்போது நண்பர் விஜயகாந்த் குறித்து சொல்லுங்கன்னு கேட்ட போது சரத்குமார் சொன்ன தகவல்கள்தான் இவை.
விஜயகாந்தின் உடல்நலம் சரியில்லாதபோதே என்னோட மனசு உடைஞ்சிப் போச்சு. பெரிய ஜாம்பவானா இருந்து ‘டேர் டெவில் பர்சனாலிட்டி’யா இருந்துட்டு உடல்நலம் சரியில்லன்னதுமே ரொம்ப வருத்தமாகத்தான் இருந்துச்சு. அவர் வீட்டுல போய் சந்தித்தேன். ரொம்ப சாஃப்டா பேசிக்கிட்டு இருந்தாரு.
அவரது மறைவு ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்துச்சு. டிபரன்டான பர்சனாலிட்டி. உதவி பண்ற மனப்பான்மை, எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அதை வந்து யதார்த்தவாதின்னு சொல்வாங்க. சொல்லலாமா வேணாமான்னு இருக்கும்போது உண்மையை உடைச்சிடுவாரு. அந்த மாதிரி ஒரு கேரக்டர். ஒருத்தரோட மனசை புண்படுத்தணும்னு நினைச்சிப் பேச மாட்டாரு. தட்டிக்கொடுத்துக் கொண்டு போகணும்னு நினைக்கிற குணம் உள்ளவர்தான் விஜயகாந்த் என்கிறார் சரத்குமார்.

விஜயகாந்துடன் இணைந்து சரத்குமார் தாய் மொழி, புதுப்பாடகன், சந்தனக்காற்று, எங்கிட்ட மோதாதே, புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். எல்லாமே சூப்பர்ஹிட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் கேப்டன் பிரபாகரன் அதிரி புதிரி ஹிட் அடித்தது. இதுல சரத்குமார் கெஸ்ட் ரோல் தான் வருவார். இருந்தாலும் சூப்பர் நடிப்பு. இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஜயகாந்துக்குக் கேப்டன் பட்டம் வந்தது.