நடிகர் கார்த்திக் மற்றும் நடிகை ராகினியின் மகனான கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும், அவருடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த நடிகை மஞ்சுமா மோகனை திருமணம் செய்துக்கொண்டார். கௌதமிற்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், சமீபத்தில் தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என மாற்றினார். இந்நிலையில், அவர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
கௌதம் கார்த்திக்கின் கடல் படத்தின் வெற்றியை தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இந்திரஜித் போன்ற பல படங்களில் நடித்திருந்தும் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தார். அதையடுத்து அவர் நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த பத்து தல திரைப்படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.
மேலும், நடிகை மஞ்சுமா மோகன் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்துக்கொண்ட பிறகு சுமார் இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். சமீபத்தில் வெளியான சுழல் 2 வெப்சீரிஸின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். எட்டு பெண் குழந்தைகளை காக்கும் தாயாக மஞ்சுமா தன் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கௌதம் கார்த்திக் தற்போது இயக்குநர் மனு ஆன்ந்த் இயக்கத்தில் உருவாகி வரும் Mr.X படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும், இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து கௌதம் கார்த்திக்கின் சிப்பாய், செல்லப்பிள்ளை, தீமைதான் வெல்லும் ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இன்று கௌதம் கார்த்திக் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து சினிமா பிரபலங்கள் தங்கள் படங்கள் வெற்றிப் பெற வேண்டும் என திருப்பதி கோயிலுக்கு சென்று வருவதை பார்த்து வந்த ரசிகர்கள் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை கோயிலுக்கு நவரச நாயகன் மகன் போயுள்ளாரே என வாழ்த்தி வருகின்றனர்.