இந்திய சினிமாவின் மிக அழகான நடிகை யார் என்றால் கண்ணை மூடிக் கொண்டு ரேகா எனலாம். அந்த அளவுக்கு அழகுக்கு பெயர் பெற்றவர். தமிழ் சினிமாவின் காதல் மன்னன் ஜெமினி கணேசன் மகளான ரேகா பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர். அங்கு முன்னணி நடிகையாக ஆரம்ப காலத்திலிருந்தே, அவர் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்தார். பலர் ஒரு காலத்தில் அவரது வசீகரத்திற்காக நடிகை ரேகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டார்கள்.
இப்படி புகழ்பெற்ற நடிகையாக இருந்தபோதிலும், ரேகாவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடனான அவரது காதல் தொடர்ந்து பேசப்படும் ஒன்று. அவர்களுக்கு இடையேயான உறவு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அது இணையத்தில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் ஒன்றாக உள்ளது. இருப்பினும், அமிதாப்பிற்கு முன்பு, ரேகா மற்றொரு பாலிவுட் நட்சத்திரத்தை ஆழமாக காதலித்திருந்தார்.
பத்திரிகையாளர் யாசர் உஸ்மானின் நூலான ‘ரேகா: தி அன்டோல்ட் ஸ்டோரி’ சொல்லப்பட்டுள்ள தகவல்படி, ரேகா ஒரு காலத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஜிதேந்திராவை தீவிரமாக காதலித்தார் என்றும் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘ஏக் பெச்சாரா’ படப்பிடிப்பின் போது அவர்களுக்குள் நெருக்கம் வலுவடைந்தது. ரேகா ஜிதேந்திராவை காதலித்த அளவுக்கு அவர் ரேகாவை காதலிக்கவில்லை என்றும் அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், படப்பிடிப்பு தளத்தில், ஜிதேந்திரா ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டிடம் ரேகா தனக்கு வெறும் “டைம் பாஸ்” என்று சொன்னாராம். இந்தக் தகவல் ரேகா காதுக்கு செல்ல மனமுடைந்த அவர் மேக்கப் அறையில் தன்னை பூட்டிக்கொண்டு மணிக்கணக்கில் அழுததாகவும், பின்னர் அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ரேகா ஜிதேந்திராவுடனான உறவை முறித்துக் கொண்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
ரேகாவும் ஜிதேந்திராவும் 30க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாகத் தோன்றி, பாலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் திரை ஜோடிகளில் ஒருவராக மாறினர். ஆனாலும், ஜிதேந்திரா செய்த துரோகத்தின் காரணமாக அவரை விட்டு பிரிந்து தனிமையை நாடினார் ரேகா. அந்த துரோக செயலில் இருந்து ரேகா மீள பல காலம் ஆனதாம்.
விரைவில், ரேகா மீண்டும் காதலில் விழுந்தார். இந்த முறை திரைப்படத் துறைக்கு வெளியே, டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை காதலித்து மார்ச் 1990ல் அவரை மணந்தார் ரேகா. ஆனால் அவர்களின் திருமணம் ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்தது. ஏழாவது மாதத்தில், முகேஷ் தற்கொலை செய்து கொண்டார். இதன்பின்னர் அமிதாப் பச்சனுடன் ரேகாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக இன்றுவரை பேசப்படுவதுண்டு.