முதலில் சிக்ஸ் பேக் வச்சது யாரு?.. கொளுத்திப்போட்ட சிவக்குமார்!.. சிக்கினாரு சூர்யா!…

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ பட டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய சூர்யாவின் அப்பா சிவக்குமார் ‘தமிழ் சினிமாவில் உடம்பை வறுத்தி முதலில் சிக்ஸ் பேக் வச்சது சூர்யாதான். அவருக்கு முன்பும் சரி.. பின்னாலும் சரி. எவனும் வைக்கவில்லை’ என பேசினார்.

இதைப்பார்த்த சூர்யாவே ‘இதெல்லாம் தேவையா?’ என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்து சமாளித்தார். இதையடுத்து சிவக்குமார் சொன்னது சரியா?.. ‘இந்த குடும்பத்துக்கு இதே வேலையா போச்சி’ என பதிவிட்டு வருகிறார்கள். சூர்யாவுக்கு முன்பே தனுஷ், விஷால் போன்றவர்கள் சிக் பேக் வைத்திருக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் 8 பேக் வைத்திருந்தார் என்றெல்லாம் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் பிரபல யூடிபர் மற்றும் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் உள்லே புகுந்து சினிமாவில் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்தான். கராத்தேவில் முதலில் பிளாக் பெல்ட் வாங்கியதும் இவர்தான் என கொளுத்திப்போட்டார். இதைப்பார்த்து கடுப்பான சூர்யா ரசிகர்கள் ‘வாராணம் ஆயிரம் படத்துக்கு அப்பறம்தான் சாமானிய மக்களுக்கு சிக்ஸ் பேக் பத்தி அதிகமா தெரிய வந்தது. இன்னைக்கு பல பேர் ஜிம்ல இருக்காங்க அப்படினா அதுக்கு காரணம் சூர்யாதான்’ என ரிப்ளை செய்து வருகிறார்கள்.

blue 1

சில பேர் சரத்குமாரின் பழைய புகைப்படங்களையெல்லாம் தேடி எடுத்து போட்டு வருகிறார்கள். மொத்தத்தில் சிவக்குமார் பேசியது சூர்யா ரசிகர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. சிவக்குமார் பேசுவதும், செய்வதும் அடிக்கடி சர்ச்சையாக மாறும்.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய அருகில் வந்து செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் ஒருவிழாவில் தன்னுடைய நண்பர் தனக்கு போட்ட சால்வையை பிடிங்கி தூக்கி வீசினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது சிக்ஸ் பேக் என்கிற விஷயத்தை துவங்கி வைத்திருக்கிறார் சிவக்குமார். ஆனால், இதில் சிக்கியது சூர்யாதான்.

நன்றி

Leave a Comment