ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் குஷ்பு. கார்த்திக்கு ஜோடியாக நடித்த வருஷம் 16 படம் இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். 90களில் ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், பிரபு, சரத்குமார் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
பப்ளியான உடலமைப்பு, குழந்தை போல க்யூட்னஸ் என ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் போனார்கள். நம்பர் ஒன் நடிகையாக இருக்கும்போதே சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் அரசியலில் இறங்கினார் குஷ்பு. துவக்கத்தில் திமுகவில் இருந்த குஷ்பு அதன்பின் அந்த கட்சியில் பிரச்சனை ஏற்பட்டு காங்கிரஸுக்கு போனார். பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் திடீரென ஒரு நாள் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஆனால், பாஜகவில் குஷ்புவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சரியான பதவியும் கொடுக்கப்படவில்லை. என்னை யாரும் எங்கும் அழைப்பதில்லை என வருத்தப்பட்டார் குஷ்பு. ஆனாலும், பாஜக மேலிடம் அவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, குடும்பத்தை கவனித்துக்கொள்வதோடு சுந்தர்.சி படங்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய குஷ்பு ‘நான் ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியது ரஜினி சார் நடித்த 2 ஹிந்தி படங்களில் நடிக்க என்னை கேட்டார்கள். ஆனால், என் அப்பா என்னை அனுமதிக்கவில்லை. எனக்கும் ரஜினி சார் பெரிய ஹீரோ என்பது தெரியாது. கமல்தான் பெரிய ஹீரோ என நினைத்திருந்தேன். ஏனெனில், ஏக் துஜே கேலியே, சனம் தேரி கசம் போன்ற படங்கள் மூலம் கமல் ஹிந்தியிலும் பிரபலமாகியிருந்தார்.
திருமணம் செய்தால் இப்படி ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த வயதில் அப்படித்தான் தோன்றும். ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பின்னர்தான் ரஜினி சார் சூப்பர்ஸ்டார் என்பது எனக்கு தெரிந்தது’ என குஷ்பு பேசியிருக்கிறார். இதே குஷ்பு பின்னாளில் நாட்டுக்கொரு நல்லவன், பாண்டியன், மன்னன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.