ரியல் லக்கி பாஸ்கர் சிவகார்த்திகேயன்தான்! அடுத்த ஜாக்பாட் என்ன தெரியுமா?

Sivakarthikeyan: இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் பெயராக மாறியிருப்பது சிவகார்த்திகேயனின் பெயர்தான். அந்தளவுக்கு தன் வீட்டு பிள்ளையாகவே மக்கள் மனங்களில் குடி போனார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஒட்டுமொத்த ஆடியன்ஸின் இதயங்களை வென்று விட்டார் சிவகார்த்திகேயன். அவருடைய ஆரம்பகால படங்களில் இருந்து சார்மிங்கான கேரக்டர்களிலேயே நடித்து இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறியிருக்கிறார்.

அவருடைய இந்த சினிமா பயணம் மிகவும் சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. விளையாட்டுப் பிள்ளையாகவே நடித்து தன் காமெடி மூலம் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த சிவகார்த்திகேயன் ஃபேமிலி ஆடியன்ஸை தனதாக்கிக் கொண்டார். அதிலிருந்து ஆக்‌ஷனில் இறங்கி ஒரு அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அமரனாக ஜெயித்தார்.

அவரை இன்னும் ஒரு படி மேலாக தூக்கி நிறுத்திய படம் தான் அமரன். அமரன் கொடுத்த புகழ் அதை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்போடு அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். அடுத்து தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் இருந்து இயக்குனர்கள் வரை அதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படமும் அவர் கெரியரில் மிகவும் பேசப்படும் படமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் மதராஸி படத்திலும் நடித்து வருகிறார். இன்னும் அந்தப் படத்திற்கு ஏழு நாள்கள் தான் கால்ஷீட் இருக்கிறதாம். அதுவும் ஒரு ஆக்‌ஷன் படமாகத்தான் இருக்கப் போகிறது. இந்த இரு படங்களுக்கு பிறகு பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது.

sk

இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்திதான் இயக்குவதாக இருந்தது. ஆனால் சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் நானியை வைத்து படம் பண்ணப் போய்விட்டார். அதனால் பேஷன் ஸ்டூடியோவிற்கு கொடுத்த கால்ஷீட் அப்படியே இருப்பதால் குட் நைட் பட இயக்குனருடன் சேர இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். குட் நைட் இயக்குனர் வினாயக் சந்திரசேகர் ஏற்கனவே ஒன் லைனை சிவகார்த்திகேயனிடம் சொல்லிவிட்டாராம்.

இன்னும் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்து வருகிறாராம். இருந்தாலும் இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போக அவருக்கு நெருக்கமானவர்களிடம் இந்த கதையை பற்றி மிகவும் சிலாகித்து பேசி வருகிறாராம் சிவகார்த்திகேயன். அதுவும் இந்த வருடத்தின் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று சொல்லி வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

நன்றி

Leave a Comment