!-- header 0.1 -->

வடிவேலுவுக்கு பட வாய்ப்பு குறைஞ்சதுக்கு காரணமே இதுதானாம்… முடிச்சை அவிழ்த்த பயில்வான்!

வடிவேலு சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எதுவுமே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. அவரது காமெடியும் பழைய மாதிரி எடுபடவில்லை. இடையில் படவாய்ப்புகளே இல்லாமல் ரொம்ப காலமாக இருந்தார். இதற்கு என்ன காரணம் என்பதை பிரபல சினிமா விமர்சகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

வடிவேலு ஒரு பெரிய இயக்குனர்தான் நடிக்காமப் போனதுக்குக் காரணம்னு சொன்னார். அவருக்கிட்ட போய் நான் இப்படி தான் பேசுவேன். இந்த டயலாக் பிடிக்கலன்னு சொல்றாரு. நான் இப்போ சோகமா இருக்கேன். நான் எழுதிக்கொடுத்ததை மட்டும் பேசுங்கன்னு டைரக்டர் சொல்றாரு. அப்படின்னா நடிக்க மாட்டேன்னு வந்துட்டாரு வடிவேலு இதுதான் நடந்தது.

இன்னொரு டைரக்டர்கிட்ட போய் செட்டை மாத்துங்க. எனக்கு இது பிடிக்கல. என் ரசிகர்களுக்கும் பிடிக்காதுன்னு சொல்றாரு. ஒரு படத்தின் தயாரிப்புல கேப்டன்னா அது இயக்குனர்தான். அவருக்குத் தான் எது தேவை தேவையில்லன்னு தெரியும். அங்க போய் நாம மூக்கை நுழைக்கக்கூடாது.

நான் உருவாக்கிக் கொடுத்த கதாபாத்திரத்துக்கு இந்த டிரஸ்தான் சரின்னு சொல்றாரு இயக்குனர். அது எனக்கு செட்டாகாதுன்னு சொல்லி சண்டை போடுறாரு வடிவேலு. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரே வடிவேலுக்கிட்ட மாட்டிக்கிட்டு அல்லல் பட்டுருக்காரு. வடிவேலுவுக்கு மாற்றாக வந்தவர்தான் சந்தானம். அவரு கதாநாயகனா ஆனதும் யோகிபாபு வந்தாரு.

nai sekar

சினிமாவைப் பொருத்தவரைக்கும் தயாரிப்பாளர் பல லட்சங்களை, பல கோடிகளை முதலீடு செய்றாரு. முதலீடு செய்யும்போது ஒரு பைசா வராது. அந்தப் படம் தயாராகி தியேட்டர்ல போயிதான் வருமானத்தைப் பார்க்க முடியும். அப்படின்னா அந்த டைரக்டரும், தயாரிப்பாளரும் எவ்வளவு பொறுமையா இருந்துருப்பாங்க.

அதை சோதிக்குற வகையில சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் வடிவேலு. அதுதான் சினிமா உலகில் அவர் மேல இருக்குற குறை. அதுதான் அவருக்கு பட வாய்ப்பைக் குறைத்தது. நாய்சேகர் returns படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததுக்குக் காரணமே வடிவேலுதான். அவரது தலையீடு படத்தில் அதிகம் இருந்தது என்கிறார் பயில்வான்.

நன்றி

Leave a Comment