Karthi: தற்போது கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறது. கார்த்தி பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களுடனேயே அதிக படங்களில் நடித்திருக்கிறார். ஏகப்பட்ட இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு நடிகர் கார்த்தி.
அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மெய்யழகன் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லை என்றாலும் விமர்சன ரீதியாக அந்த படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இதற்கிடையில் வா வாத்தியாரே திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் டீஸர் எல்லாம் வெளியாகி பெரிய ஹைப்பை ஏற்படுத்தியது.
அந்த படத்தை நளன் குமாரசாமி இயக்கி வருகிறார். நீண்ட காலமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கார்த்தியின் கெரியரில் அதிக நாள் படப்பிடிப்பு நடந்த படம் என்றால் அது காஸ்மோரா திரைப்படம் தான். அதற்கு அடுத்தபடியாக அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது வா வாத்தியாரே திரைப்படம். கிட்டத்தட்ட 160 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்.
இருந்தாலும் இன்னும் கார்த்தி 20 நாள் கால்சீட்டை கொடுத்தால் மட்டுமே இந்த படப்பிடிப்பை முடிக்க முடியும் என நளன் கூறி இருக்கிறாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். ஆனால் கார்த்தி தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருவதால் என்னால் இப்போதைக்கு இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாது என சொல்லிவிட்டாராம்.

அதனால் வா வாத்தியாரே திரைப்படம் எப்போது முடியும் என தெரியவில்லை. இதற்கிடையில் கடந்த வருடமே இந்த படம் ரிலீசுக்கு வந்துவிடும் என அமேசான் நிறுவனமும் இந்த படத்தின் ரைட்சை வாங்கியிருக்க இன்னும் இந்த படப்பிடிப்பு முடியாத சூழலில் அமேசான் நிறுவனமும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது .அதனால் இந்த படத்தின் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.