Kushboo: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை என்றால் அது குஷ்பூ தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவையே ஒரு காலத்தில் கலக்கியவர் குஷ்பூ. தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் இவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது. 90களில் இவர்தான் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோகளில் நடுவராகவும் ஆங்கராகவும் இருந்து ஒரு என்டர்டெய்னராகவும் மாறினார் குஷ்பூ. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சீரியலை தயாரிப்பது அதில் நடிப்பது என அடுத்தடுத்து லைம் லைட்டில் இருந்து வந்தார் குஷ்பூ.
இப்பொழுது கணவருடன் சேர்ந்து படங்களையும் தயாரித்து வருகிறார். இன்று வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் குஷ்புவின் தயாரிப்பில் தான் வெளியாகி இருக்கிறது. 40 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகிறார் குஷ்பூ. இந்த நிலையில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். குறிப்பாக அதில் சின்னத்தம்பி படத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். சின்னத்தம்பி படத்தில் பிரபு லீடு ரோலில் நடித்தாலும் கிளைமாக்ஸில் அனைவரின் கைத்தட்டல்களை வாங்கியது குஷ்புவாக தான் இருக்கும்.
குறிப்பாக நீ எங்கே என் அன்பே பாடல் அவருக்கு ஒரு பெரிய புகழை பெற்றுக் கொடுத்தது. அந்தப் பாடலில் நடித்ததை பற்றி குஷ்பூ அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். குஷ்புவை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு காட்சியாகட்டும் எந்த ஒரு பாடல் நடனம் ஆகட்டும் ரிகர்சல் செய்து நடிக்க வேண்டும் என்று எண்ண மாட்டாராம். ஆனால் இந்த பாடலை பொருத்தவரைக்கும் அது குஷ்பூ பாடுவது போல காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதுவும் மிகுந்த வலியுடன் பாடுவது போல இருக்கும். அதனால் பிரபல அமெரிக்க பாடகியான விட்னி ஊசுட்டன் பாடிய பல பாடல்களை ரிகர்சல் செய்தாராம் குஷ்பூ.
ஏனெனில் அந்தப் பாடகி தான் மிகுந்த வலியுடன் நிறைய பாடல்களை பாடி இருக்கிறாராம். அதனால் அவருடைய பாடல்களை நிறைய பார்த்து பார்த்து தான் சின்னத்தம்பி படத்தின் அந்த பாடலில் குஷ்பூ நடித்தாராம். சின்னத்தம்பி படத்தில் நடிக்கும் பொழுது குஷ்புவுக்கு தமிழ் தெரியாதாம். அதனால் பாடல் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமல் முழிக்கும் போது பிரபு தான் அவருக்கு உதவியாக இருந்தாராம். ஒரு கட்டத்திற்கு மேலாக பிரபுவுக்கு நெருக்கமான ஒரு சிலர் நீ எங்கே என் அன்பே பாடலை பார்த்ததும் படத்திலிருந்து இந்த பாட்டை தூக்கி விடுங்கள், இல்லை என்றால் படம் வெளியானதும் உங்களைவிட குஷ்புவுக்கு தான் பெயர் நிறைய கிடைக்கும்.

அப்படி ஒரு பெர்பார்மன்ஸை செய்திருக்கிறார் குஷ்பூ என பல பேர் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பிரபு அதற்கு மறுத்துவிட்டாராம் .நன்றாக நடித்திருக்கிறார், அவருடைய இந்த நடிப்பு வெளியில் தெரிய வேண்டும். அதனால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றெல்லாம் சொன்னாராம் பிரபு. இதைப் பற்றி மேலும் கூறிய குஷ்பூ ‘இதே இந்த படத்தில் அல்லது வேறொரு ஹீரோவாக இருந்தால் கண்டிப்பாக இந்த பாடலை தூக்கி இருப்பார்கள். ஆனால் பிரபு அப்படி பண்ணவே இல்லை’ என குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.