40 கல்யாணம் பண்ணுவேன்!.. கமலை தொடர்ந்து வனிதா விஜயகுமார் பேசிய பேச்சு!.. சமஸ்தானமே ஆடிப்போச்சு!

நடிகை வனிதா விஜயகுமார் தற்போது அலர்ட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த வனிதா என் பென்ச் மார்க் இன்னும் நாளு கூட வரல என்று பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மூத்த நடிகரான விஜயகுமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவிற்கு பிறந்த முதல் மகள் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மாணிக்கம், காக்கை சிறகினிலே, நான் ராஜாவாக போகிறேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அதையடுத்து, வனிதா 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். பிறகு 2005ம் ஆண்டிலேயே சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்துள்ளார். சில ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்து மகனை தந்தை ஆகாஷ் மற்றும் தாத்தா விஜயமுகாரிடமும் மகளை வனிதாவிடமும் வாழ கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

aaa24

மேலும், 2007ம் ஆண்டு ஆனந்த் ஜெயராஜன் என்னும் தொழிலதிபரை வனிதா இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தார். இவர்கள் இருவருமே சில ஆண்டுகளில் பிரிந்தனர். அதன் பிறகு நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளில் அந்த உறவும் முறிந்தது. இப்படி பல சர்ச்சைகளில் இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியேற சில ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக்கொண்டார் வனிதா.

அதன் பிறகு பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் பங்கேற்றதன் மூலம் கம்பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து போட்டோகிராஃபரான பீட்டர் பாலை திருமணம் செய்துக்கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பீட்டர் பால் சமீபத்தில் உயிரிழந்தார்.

தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். வனிதாவின் மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் நடிப்பில் மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் அலர்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த வனிதா நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன். ஆனால், இன்னும் என் பென்ச் மார்க் 4 கூட வரல ஏன் என்ன அசிங்கப்படுத்துறீங்க என கிண்டலாக தனது திருமண வாழ்க்கையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

நன்றி

Leave a Comment