OTT Watch: அதிகரித்து வரும் ஓடிடி பயன்பாடுகள் ரசிகர்களுக்கு தகுந்த விருப்பத்தில் படத்தை எடுக்க இயக்குனர்களுக்கும் உதவி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அந்த வகையில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எமகாதகி திரைப்படம் எப்படி இருக்கு என்பதன் தொகுப்புகள்.
ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், ராஜு ராயப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் எமகாதகி. ஐஎம்டிபி ரேட்டிங்கே 7.3ஐ தொடும் அளவுக்கு படம் மாஸாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி படத்தின் கதைதான் என்ன?
தஞ்சாவூர் பக்கத்தில் சின்ன கிராமத்தில் இந்த கதை நடக்கிறது. ஊர் தலைவர் தன்னுடைய மகளை அசிங்கமாக திட்டி அடித்ததால் அவர் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறார். ஊரில் திருவிழா நடந்து வருகிறது. இந்த நேரத்தில் துர்மரணம் என்றால் அது இவர்களின் மரியாதையைக் கெடுக்கும்.
இதற்காக சின்ன வயதில் இருந்து அவருக்கு மூச்சு திணறல் பிரச்சினை இருந்ததாகவும் அதனால்தான் அவர் உயிரிழந்ததாகவும் கதையை கட்டி விடுகின்றனர். கடைசி காரியம் செய்ய பிணத்தை தூக்க போனால் யாராலும் அசைக்க முடியாமல் அதிர்ச்சி கொடுக்கிறது.
ஒரு கட்டத்தில் பிணம் எழுந்து உட்கார இருந்தவர்கள் தெறித்து ஓடுகின்றனர். ஒரு பக்கம் என்ற பிணத்தால் பிரச்சனை எழுந்திருக்க ஊர் அம்மனின் கிரீடம் வேறு காணாமல் போகிறது. ஊர் தலைவரின் வீட்டில் இருக்கும் அறையின் மர்மம் ஒரு பக்கம் பிரச்சனையை உருவாக்குகிறது.

இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் விடை தெரிவதுதான் மிச்சக்கதை. கிளைமாக்ஸ் யாரும் எதிர்ப்பாக்காத ரகம். பிணமாக நடித்திருக்கும் ஹீரோயின் ரூபா நடிப்பில் மிரட்டி இருக்கிறார். யூட்யூப் பிரபலம் நரேந்திர பிரசாத் நடிப்பில் பாஸ் மார்க் தான்.
முக்கியமாக படத்தில் இருக்கும் எல்லா கேரக்டர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். திரைக்கதையில் எங்குமே இடஞ்சல் இல்லை சரியான பாதையில் சூப்பராக செல்கிறது. படத்தின் ஒளிப்பதிவு நம்மையே மிரள செய்யும்.
கதையில் தேவையான காட்சிகள் மட்டுமே இருக்கு. பில்டப் என்ற பெயரில் எதையுமே தேவையே இல்லாமல் திணிக்கவே இல்லை. படம் புது அனுபவம் என்பதில் சந்தேகமே இல்லை. நல்ல கதைகளை சில நேரங்களில் இப்படி கொண்ட்டாமல் தவற விடுகிறோம். இப்படம் ஆஹா ஓடிடியில் இருக்கிறது.