Pandian Stores2:  சுகன்யா சுயரூபத்தை கண்டுபிடித்த சரவணன்… இனி என்ன நடக்குமோ?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுக்கான தொகுப்புகள்.

சுகன்யா மட்டும் வீட்டில் இருக்க பழனிக்கு ஓயாமல் கால் செய்து அவரை வீட்டுக்கு வரச் சொல்லி விடுகிறார். அவர் வீட்டிற்கு வர தான் எப்படி ஒற்றை ஆளா எல்லாருக்கும் சமைக்க முடியும். என்னால் சமைக்க முடியாது. நீயே சமைச்சிக்கோ என்கிறார்.

பழனி தனக்கு சமைக்க தெரியாது எனக் கூற அப்போ ஹோட்டலில் வாங்கிக்கோ என்கிறார். காசு இல்லையா எனக் கேட்க அதெல்லாம் பிரச்னை இல்லை. மாமாக்கு அதெல்லாம் பிடிக்காது என்கிறார். நான் சமைக்கணும்னா நீ பாதி வேலை செய்யணும் என்கிறார் சுகன்யா.

பழனி அவர் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார். அப்போ அவர் வீடு துடைக்கும் போது சுகன்யா கிச்சனில் இருந்து சத்தம் போட அப்போ ஹாலுக்கு வரும் சரவணன் இதை கேட்டு விடுகிறார். சுகன்யா வெளியில் வர சரவணனை பார்த்து பேச்சை மாற்றி சமாளித்து விடுகிறார்.

ps4 1

பின்னர் பழனி மற்றும் சரவணன் மாடியில் குடித்து கொண்டு இருக்கின்றனர். உங்களுக்குள் என்ன பிரச்னை எனக் கேட்க எனக்கே தெரியலைடா. ஏன் இந்த பிரச்னைனு. எப்ப பாரு திட்டிக்கிட்டே இருக்கா. தூங்கவும் விடுறதே இல்லை. சத்தம் போடுறா. எங்க அண்ணன் வீட்டில் இருக்கலாம் நினைச்சு வந்தாலா எனத் தெரியலை. 

காசுக்கு பிரச்னையா என்ன கோபம்னே தெரியலை என்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார் சரவணன். அம்பாசமுத்திரத்தில் மூன்று மருமகள்களும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். மீனாக்கு செந்தில் கால் செய்து மிஸ் செய்வதாக புலம்புகிறார்.

இதை பார்க்கும் தங்கமயிலையும் கால் செய்ய சொல்ல அவர் கால் செய்தாலும் சரவணன் எடுக்காமல் போகிறார். ராஜி கதிருக்கு கால் செய்ய அவர் சுகமா சந்தோஷமா இருக்கேன் எனக் கலாய்க்கிறார். இதனால் அவர் கடுப்பாகி திட்டிவிட்டு போனை வைக்கிறார். 

நன்றி

Leave a Comment