Siragadikka Aasai: மீண்டும் வெடித்த முத்து-அருண் பிரச்னை… சீதா காதலில் புயல் வீசும் போலயே?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

அருண் முத்துவை இடை மறித்து ஊத சொல்லுகிறார். ஆனால் தான் குடிக்காமல் எதுக்கு ஊதணும். நான் ஊத மாட்டேன் என முத்து பிரச்னை செய்கிறார். இருவரும் வாக்குவாதம் செய்ய இன்னொரு போலீஸ் அங்கு வருகிறார்.

என்னப்பா பிரச்னை எனக் கேட்க நான் குடிக்கவே இல்லை சார். இவர் என்னை ஊத சொல்லுறாரு என்க ஊதுனா தெரிஞ்சிடும் என்கிறார். உடனே முத்து நீங்க சொன்னா கேட்பேன் சார் எனக் கூறி ஊத அவர் குடிக்கவில்லை என்பதால் நீங்க போங்க சார் எனக் கூறுகிறார். 

முத்து உடனே செல்வத்துக்கு கால் செய்து பாருக்கு வரச் சொல்லுகிறார். மறுபக்கம் மீனா வீட்டிற்கு வந்து சீதா மற்றும் அம்மாவிடம் டெபாசிட் பணத்தை கட்ட வேண்டும் என்ற விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார். இந்திரா தானும் ரெடி பண்ண ட்ரை செய்கிறேன் எனக் கூறுகிறார்.

sirag

சீதா தான் சீட்டு போட்டு 1 லட்சம் வச்சிருக்கேன். 40 ஆயிரம் அக்கவுண்ட்டில் வச்சிருக்கேன் எனக் கூறி நீ கண்டிப்பா வாங்கிக்கணும் அக்கா எனக் கூறுகிறார். மீனா தன்னிடம் 10 ஆயிரம் இருக்கு இன்னும் ஒரு லட்சம் மட்டுமே ரெடி செய்யணும் எனக் கூறி செல்கிறார்.

முத்து குடிச்சிட்டு வர செல்வம் காரை அதே இடத்திற்கு ஓட்ட சொல்லுகிறார். அருண் செல்வத்தை செக் செய்ய அவன் குடிக்கலை நான் தான் குடித்தேன். ஊதவா எனக் கேட்க அங்கு வரும் போலீஸ் உடனே காரை எடுக்க வேண்டும் என திட்டி அனுப்புகிறார்.

அண்ணாமலை மீனாவிடம் முத்து இன்னும் வரலையா எனக் கேட்க சவாரி போய் இருப்பாரு என்கிறார். அப்போ முத்து வர அவர் குடிச்சிருப்பதை தெரிந்து கொள்கிறார். எதுக்கு குடிச்சீங்க எனக் கேட்க அருண் தன்னை ஊத சொன்ன விஷயத்தை சொல்லுகிறார்.

அவர் வேலைக்கு தானே செய்றாரு என்க முத்து, எனக்கு சப்போர்ட் செய்யவே மாட்டிங்கிற. யார் யாருக்கோ சப்போர்ட்டா பேசுற எனக் கூற இப்போ நீங்க குடிச்சிருக்கீங்க. போய் படுங்க என மீனா சொல்லி விடுகிறார்.

நன்றி

Leave a Comment