தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், அதிக வரி செலுத்தும் நடிகர்களில் ஒருவராக அடிக்கடி பட்டியலில் இடம்பிடித்து வருகிறார். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் ‘புலி’ படத்திற்காக பெற்ற 15 கோடி ரூபாய் ரொக்கத்திற்கு வரி செலுத்தவில்லை என வருமானவரி துறை கூறியுள்ளது. இதன் காரணமாக, அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம் 2019-ஆம் ஆண்டிலேயே விதிக்கப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால் தாமதமாக தற்போது விதிக்கப்பட்டுள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும் என விஜய் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வருமானவரி துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது
read more:Bigg Boss Tamil 9: பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் போட்டியாளராக வருகிறாரா?