கடைசியா ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல ரசூல்ங்கிற கேரக்டர்ல ரணகளம் பண்ண நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இப்போ மறுபடியும் லெஜெண்ட் மணிரத்னம் கூட கை கோர்க்கப்போறார். பல நாளா சோசியல் மீடியால ஓடிக்கிட்டு இருந்த உருட்டுகளுக்கு இப்போ முற்றுப்புள்ளி வச்சாச்சு.
ஆமாங்க, இத விஜய் சேதுபதியே ஒரு Interview-ல Confirm பண்ணிட்டாரு!
“மணி சார் கூட ஏற்கனவே ஒர்க் பண்ணிருக்கேன். ஆனா இந்த முறை படம் ரொம்ப Different-ஆ இருக்கும்” அப்படின்னு சொல்லி பெரிய ஹைப் ஏத்தி விட்டுருக்காரு. படத்தோட First Look இன்னும் வரலனாலும், அதுக்குள்ளயே கோலிவுட்ல இந்த காம்போ பெரிய Trending ஆகிடுச்சு.

-
Dream Combo: முதல் முறையா விஜய் சேதுபதி – சாய் பல்லவி ஸ்கிரீன்ல ஒண்ணா வராங்க. இவங்க ரெண்டு பேருமே செம Performer-ங்கிறதுனால, நடிப்புல தீப்பொறி பறக்கும்னு எதிர்பார்க்கலாம்.
-
The Genere: இது ஒரு Romantic Entertainer-ஆ இருக்கலாம்னு ஒரு பேச்சு ஓடுது.
-
Official Update: படத்தோட மியூசிக் நம்ம ‘இசைப்புயல்’ AR Rahman தான். மணிரத்னம் + ஏ.ஆர். ரஹ்மான் காம்போனாலே பாடல்கள் எல்லாம் Record Break பண்ற அளவுக்கு இருக்கும்ல!
-
Shooting Spot: 2026 மார்ச் மாசத்துல Shooting ஆரம்பிக்கப்போறதா தகவல் வந்துருக்கு.
மணிரத்னத்தோட ‘தக் லைஃப்’ படத்துக்கு அப்புறம் வர்ற படம்கிறதுனால இத பத்தி பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. சாய் பல்லவியும் இப்ப தான் ‘ராமாயணம்’ படத்துல பிஸியா இருக்காங்க. அது முடிஞ்ச கையோட இந்த படத்தோட Set-க்கு வந்துடுவாங்க போல!
விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. இந்த ஜோடியோட கெமிஸ்ட்ரி ஸ்கிரீன்ல எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க? கீழ கமெண்ட் பண்ணுங்க!