காந்தாரா 2 படப்பிடிப்பு பரபரப்பு தொடரும் மரணங்களால் அதிர்ச்சி|kantara-2-shooting-deaths

kvetrivel270

காந்தாரா 2 படத்தில் தொடரும் துயர சம்பவங்கள்: படகு விபத்தில் பலர் உயிர்தப்பினர்|kantara-2-shooting-deaths

kantara-2-shooting-deaths:காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் தொடரின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே படக்குழு பல்வேறு சிக்கல்கள் மற்றும் துயரச் சம்பவங்களை எதிர்கொண்டுள்ளது.

முதலில், நடிகர் கபில், கர்நாடகாவின் சவுபர்ணிகா நதியில் ஷூட்டிங்கின் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, நடிகர் ராகேஷ் புஜாரி மாரடைப்பால் உயிரிழந்தார். சமீபத்தில், நடிகர் விஜூ விகே ஹோட்டல் அறையில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டார்.

kantara-2-shooting-deaths
kantara-2-shooting-deaths

இந்த மரணங்கள் தொடர்ச்சியாக நடப்பதால் படக்குழுவில் கவலை அதிகரித்துள்ளது. இந்நிலையில், நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த 30 பேர் பயணித்த படகு, ஷிவமோகா பகுதியில் உள்ள ஒரு நீர்த்தேக்கத்தில் விபத்தில் சிக்கியது.

அச்சமயம் நீரின் ஆழம் அதிகமாக இல்லாததால், பெரும் பேரழிவுகள் தவிர்க்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக உயிர்தப்பினர்.

இந்த தொடர் சம்பவங்கள் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. காந்தாரா 2 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமா அல்லது இடைநிறுத்தப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Comment