saddam hussein பிறந்தநாளுக்கு கேக்.. ஒரு சிறுவனின் உயிர் போராட்டம்: ‘The President’s Cake’

ஈராக் அதிபர் saddam hussein பிறந்தநாள். அந்த தேசமே ஒருவித அச்சத்தில் உறைந்திருக்கிறது. ஆனால், ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கு மட்டும் அது வாழ்வா சாவா போராட்டம். ஒரு கேக் அவன் உயிரைத் தீர்மானிக்கப் போகிறது.

சர்வாதிகாரத்தின் கோர முகத்தை ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில் விவரிக்கும் ‘The President’s Cake’ திரைப்படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சிக்காலத்தில், ஒரு சாமானிய குடும்பம் எதிர்கொள்ளும் நெருக்கடியை இந்தப் படம் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்கிறது.கதையின் நாயகன் ஒன்பது வயது சிறுவன். அவனது தந்தை ஒரு சிறந்த பேக்கர் (Baker). சதாம் உசேனின் பிறந்தநாளுக்காக ஒரு பிரம்மாண்டமான கேக் தயாரிக்க அவர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த கேக் சரியாக அமையாவிட்டால் அல்லது அதில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால், முழு குடும்பமும் கொல்லப்படும் என்கிற மரண பயம் ஒவ்வொரு காட்சியிலும் தகிப்பை உண்டாக்குகிறது.அதிபர் சதாம் உசேனை ஒரு கடவுளாகக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு சமூகத்தில், அதே அதிபரால் ஒரு குடும்பம் எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை இயக்குநர் மிக நுணுக்கமாகக் கையாண்டுள்ளார்.

TNPSC CTS Hall Ticket 2026 3

சிறுவன் தனது தந்தைக்குக் கேக் செய்ய உதவும்போது, அவனது கண்களில் தெரிவது ஒருவிதமான அப்பாவித்தனம் கலந்த மரண பயம்.அரசியல் ரீதியான பெரிய வசனங்கள் ஏதுமின்றி, சமையலறைக்குள் நடக்கும் உரையாடல்கள் மூலமே ஈராக்கின் அன்றைய அரசியல் சூழலை இந்தப் படம் விளக்குகிறது. சதாம் உசேனின் அதிகார பலம், ஒரு கேக் மூலமாக எளிய மனிதர்களின் வாழ்வை எப்படி அச்சுறுத்துகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு.

சர்வாதிகாரியின் பிறந்தநாளைக் கொண்டாட ஒரு தேசமே தயாராகும் வேளையில், ஒரு பக்கம் பசியும் பயமும் நிறைந்த சாமானியர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெறும் ஒரு வரலாற்றுப் பதிவு மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்களின் மனசாட்சியைத் தொடும் ஒரு படைப்பு.சிறுவனின் தந்தை கேக் தயாரிக்கும்போது ஏற்படும் பதற்றம், பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. அந்த கேக் மேசை மீது வைக்கப்படும்போது, அது இனிப்பைக் கொண்டிருக்கவில்லை, ஒரு தேசத்தின் கசப்பான உண்மையைச் சுமந்து நிற்கிறது.முடிவில், அந்தச் சிறுவன் எஞ்சி நிற்பது ஒரு வரலாற்றுச் சாட்சியாகத்தான்

Leave a Comment