நடிகர் விஜய் சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து, அரசியலில் இணைந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியுள்ளார். அவர் நடிக்கும் கடைசிப் படம் “ஜனநாயகன்”. தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் அடித்த “பகவந்த் கேசரி” படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறும் விஜய்க்குப் பொருத்தமான கதையாகவும் மாற்றி எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.
ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில், தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெறாததால் படம் திரைக்கு வரவில்லை. இதற்குப் பின்னணியில் சில அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. வரும் 23-ம் தேதி “ஜனநாயகன்” படம் வெளியாகலாம் என பலரும் கூறுகின்றனர். அப்படி அன்று வெளியாகவில்லை எனில், ஜூலை 31-ம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய “சிக்மா” படமும் ஜூலை 31-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விஜயை வைத்து “மாஸ்டர்”, “லியோ” ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள “டிசி” படமும் ஜூலை 31-ம் தேதி வெளியாகிறது. அந்த தேதியில் “ஜனநாயகன்” ரிலீஸ் ஆனால், இந்த இரண்டு படங்களின் ரிலீஸும் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
குறிப்பு: சமீபத்திய தகவல்களின்படி, தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல் இன்னும் முடிவடையவில்லை; ஜூலை மாத இறுதி/ ஆகஸ்ட் முதல் வாரம் என பல தேதிகள் ஊகிக்கப்பட்டு வந்தாலும், இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.