நடிகை சுகன்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை: “ஒரு வருடம் கூட ஒன்றாக வாழவில்லை!”|Actress Sukanya Opens Up
தமிழ் சினிமாவின் 80களின் பிரபல நடிகைகளில் ஒருவரான சுகன்யா, தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்களை ஒரு சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள்
பரதநாட்டியத்தில் திறமைசாலியான சுகன்யா, நடிப்புக்கு அப்பாற்பட்டு நடனமே தனக்கு மிகவும் பிடித்தம் என்று எப்போதும் சொல்லிவருகிறார். அவரது திருமண வாழ்க்கை மட்டும் எதிர்பார்தபடி அமையவில்லை.

பேட்டியில் அவர் கூறியதாவது:
“நானும் என் முன்னாள் கணவரும் ஒரு வருடம் கூட ஒன்றாக வாழவில்லை. மேலும், என் அக்காவின் மகளை என் குழந்தை என்று தவறாக பிரசாரம் செய்தனர். இதைப் பலமுறை மறுத்தும், தொடர்ந்து இந்த பொய் பரப்பப்பட்டது. இதற்காக நான் ஒரு செய்தி சேனலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தேன். சமீபத்தில்தான் அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.”
பல்துறை திறமையாளர்
“புது நெல்லு புது நாத்து” படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா, முதல் படத்திலேயே பல விருதுகளை வென்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞராகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், தனிப்பட்ட வாழ்க்கையில் சுகன்யா சந்தித்த சவால்கள், அவரது வலிமையையும் தைரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.