அவங்க பெரிய ஆள் ஆகிட்டாங்க, நான் எதுக்கு?” குஷ்பூ மகள் திருமணத்திற்கு அழைக்காததால் கொதித்த ராதாரவி!
குஷ்பூ மகள் திருமணத்தில் ராதாரவி இல்லாதது ஏன் நேரடியாக பதில் சொன்னார்! 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூவின் மகள் அவந்திகாவின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் ஈர்த்தன. ராதாரவி ஏன் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை? திருமண நிகழ்வில் நடிகர் ராதாரவி இல்லாதது பலரின் கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் வெளிப்படையாக பதிலளித்தார். “குஷ்பூ என்னை அழைக்கவில்லை, அதனால் நானும் செல்லவில்லை. திருமணத்தை கோவாவில் வைத்தார்கள். அவர்கள் இப்போது பெரிய நிலையில் இருக்கிறார்கள், அதனால் என்னை அழைக்கவில்லை போலும்” என்று நேரடியாக சொன்னார். சுந்தர்.சி பற்றியும் ஏமாற்றம் தெரிவித்தார் ராதாரவி தொடர்ந்து பேசுகையில், “சுந்தர்.சியாவது அழைப்பார் என்று எதிர்பார்த்தேன். அவரும் அழைக்கவில்லை. மதுரையில் தேர்தலில் போட்டியிட்டபோது நான் அவரை வாழ்த்தி அனுப்பினேன். அந்த நேரத்தில் நான் தேவைப்பட்டேன்.
Read more












